close
Choose your channels

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்: அதிரடி அறிவிப்பு

Friday, January 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் 3வது சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற ’சும்மா சுர்ருன்னு வருது’ என்ற பாடல் வரும் 16ஆம் தேதி ஞாயிறு மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் டி.இமான் இசையமைப்பில் அமரன் மாலிக் மற்றும் நிகிதா காந்தி பாடிய இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் பாடல்கள் எழுதி வரும் சிவகார்த்திகேயன் தற்போது சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் பாடல் எழுதியுள்ளார்

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.