'எதற்கும் துணிந்தவன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சூர்யாவின் திரைப்படம் ஒன்று திரையரங்குகளில் வெளியாவதை அடுத்து அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர்.

மேலும் இந்த படத்திற்கு ஒருசில கலவையான விமர்சனம் வந்தாலும் பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்ததை அடுத்து நேற்றைய நாள் முழுவதும் திரையரங்குகளில் பார்வையாளர்களின் கூட்டம் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் முதல் நாள் வசூலிலேயே கிட்டத்தட்ட கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

More News

உபி தேர்தலில் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்த 'மிஸ் பிகினி'  நடிகை!

மிஸ் பிகினி பட்டம் பெற்ற பிரபல நடிகை ஒருவர் சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஒரே தசாப்தத்தில் மாநில எல்லையை கடந்த நண்பரை பாராட்டுகிறேன்: கமல்ஹாசன்

அரசியல் கட்சி தொடங்கிய ஒரே தசாப்தத்தில் மாநில எல்லையை கடந்து 2வது மாநிலத்தில் வெற்றிபெற்ற எனது நண்பருக்கு பாராட்டுக்கள் என உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

'நானே வருவேன்' மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட செல்வராகவன்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாடிய தமிழ் நடிகை: வைரல் வீடியோ

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகை தனது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடியதை அடுத்து இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

பாலா-சூர்யா படத்தில் இணையும் 3 பிரபலங்கள்?

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர்