close
Choose your channels

சும்மா சுர்ருன்னு: சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' பாடல் ரிலீஸ்

Sunday, January 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் மூன்றாவது சிங்கிள் பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் 3வது சிங்கிள் பாடலான சும்மா சுர்ருன்னு என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடலை அர்மான் மாலிக் மற்றும் நிகிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர் என்பதும் இந்த பாடலை டி.இமான் கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடல் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

சூர்யா மற்றும் பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.