close
Choose your channels

என் கூட இருக்குறவங்க எப்பவும் பயப்பட கூடாது: 'எதற்கும் துணிந்தவன்' டீசர்

Friday, February 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் மார்ச் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் இந்த படத்தின் டீசரை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த டீஸரில் சூர்யாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் வில்லனின் அட்டகாசமான காட்சிகள் ஆகியவை இடம் பெற்று உள்ளது. இந்த டீஸர் சூர்யாவின் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதும், குறிப்பாக டீசரின் இறுதியில் சூர்யா பேசும் வசனமான, ‘என் கூட இருக்கிறவங்க எப்பவும் பயப்படக்கூடாது, நம்மள யாரும் ஒன்னும் பண்ண முடியாது’ என்று கூறுவது நிச்சயம் சூர்யாவின் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவுடன் பிரியங்கா அருள்மோகன், சூரி. ராஜ்கிரண். சரண்யா பொன்வண்ணன். எம்எஸ் பாஸ்கர். தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இமான் இசையில். ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.