அட நம்ம நினைச்சது நடந்துருமா.. சிங்கம் மறுபடி திரும்புதம்மா: 'ரெட்ரோ' சிங்கிள் பாடல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ,உருவாகி உள்ள ‘ரெட்ரோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் படிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சற்று முன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை முதல் முறை கேட்கும்போதே ஆவேசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சித் ஸ்ரீராம் மற்றும் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள இந்த பாடலின் ராப் பகுதியை மற்றும் எஸ்விடிபி பாடியுள்ளார். இந்த பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த பாடலின் முதல் ஒரு சில வரிகளை இதோ:
ஒரு தீயில சொல்லிடுத்து ஒளி போடுற
கையெழுத்து அன்னொருவன் வந்திருக்காடே
பல போர்பட இருக்கலாம் எதிர்பார்த்தது இவனைத்தான்
ஒருவன் வந்திருக்காடே களமோ
அவன் மூச்சரிய மயிற்கால்களும் கூச்சரிய
வச்சவன் வந்திருக்காடே
அட நம்ம நினைச்சது நடந்துருமா
சிங்கம் மறுபடி திரும்புதம்மா
முன்ன ஒரு கதை இருந்ததம்ம
இப்ப ஊரு கொண்டு இறங்குதம்மா
நட்சத்திரம் ஒன்னு தெரியுதம்மா
நின்ன இடம் பத்தி எரியுதம்மா
அச்சம் கொண்ட மனம் ஒரு வரமா
அந்த ஒருவன அடையுதம்மா
சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com