close
Choose your channels

'பாகுபலி', 'கேஜிஎப்' பாணியில் ஒரு படம்: பிரபல இயக்குனருடன் இணைகிறார் சூர்யா!

Tuesday, May 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பாகுபலி’, ‘கேஜிஎப்’ போன்ற பிரம்மாண்டமான படத்தை உருவாக்குவதற்காக பிரபல இயக்குனருடன் நடிகர் சூர்யா இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

நடிகர் சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. இதனை அடுத்து அவர் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்படும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போவதாக செய்திகள் வெளியானது

இந்த நிலையில் ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் இது ஒரு வரலாற்று கதையம்சம் கொண்ட படம் என்றும் ’பாகுபலி’, ‘கேஜிஎப்’ போன்று பிரம்மாண்டமாக இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதுமட்டுமின்றி ’பாகுபலி’, ‘கேஜிஎப்’ போன்று இந்த படமும் இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.