மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யா: வேற லெவல் போஸ்டர் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Thursday,March 18 2021]

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சூர்யா 40’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வந்தாலும், சூர்யா இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

சூர்யா சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவில் இருந்து பூரணமாக குணமாகி விட்டதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று முதல் ’சூர்யா 40’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாக சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். சூர்யா கையில் துப்பாக்கி வைத்திருக்கும் வேற லெவல் போஸ்டரை அவரது ரசிகர்கள் ரசித்து லைக் செய்து வருகின்றனர்

டி இமான் இசையில், ரத்னவேலு ஒளிப்பதிவில், அந்தோணி ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அன்பறிவு ஸ்டாண்ட் இயக்குனர்களாக பணி செய்கின்றனர் ஏற்கனவே சூர்யா இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்போது சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More News

பின்னாடி பாக்காதீங்க… முதுகை திருப்பி இளம் நடிகை கொடுத்த வைரல் போஸ்!

தெலுங்கு சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகவும் பேசப்பட்ட திரைப்படம்

இயற்கை ரொம்ப அழகு… டிராவலிங் வீடியோவை வெளியிட்ட தமிழ் இளம் நடிகை!

ஹிப்பாப் ஆதி நடிப்பில் வெளியாகி கடந்த 2017 இல் ஹிட் அடித்த திரைப்படம் “மீசையை முறுக்கு“. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா

செம தில்லா டிராக்டர் ஓட்டும் சுல்தான் பட நடிகை… வைரல் வீடியோ!

தெலுங்கு சினிமா உலகில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

'குக் வித் கோமாளி' புகழ் சர்ச்சைக்கு காரணம் இந்த பிரபலமா?

குக் வித் கோமாளி'என்ற நிகழ்ச்சி வேற லெவலில் பிரபலமாகி உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் குக்'கள் மற்றும் கோமாளிகளுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது

தேர்தல் துளிகள்: 18 மார்ச் 2021

பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளராக நின்று கடந்த 2011, 2016 என இருமுறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர் தோப்பு வெங்கடாசலம்.