close
Choose your channels

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய சூர்யா

Wednesday, September 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா சமூக அக்கறையுடன் பல ஏழை எளிய மாணவர்களின் படிப்புக்கு உதவி வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தேனியை சேர்ந்த 16 வயது தசை சிதைவு நோயால் பாதிகக்கப்பட்ட சிறுவன் தன்னை பார்க்க விரும்பியது தெரிந்தவுடன் உடனே தனது இல்லத்திற்கு வரவழைத்து அந்த சிறுவனின் கனவை நனவாக்கியுள்ளார்.

தேனியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற சிறுவன் சுறுசுறுப்பாக மற்ற குழந்தைகளை போல் இருந்த நிலையில் 10வது வயதில் திடீரென தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது சக்கர நாற்காலியின் உதவியால் மட்டுமே வாழ்ந்து வரும் தினேஷ், தீவிர சூர்யா ரசிகராம். ஒருமுறையாவது நேரில் சூர்யாவை பார்க்க வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தார்.

இதுகுறித்த செய்தி அறிந்தவுடன் தேனி மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் அந்த சிறுவனுக்கு சூர்யா அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று சென்னையில் சூர்யாவின் வீட்டிற்கு தினேஷ்குமார் தனது குடும்பத்தினர்களுடன் வந்தார். அங்கு சூர்யா, கார்த்தி மற்றும் சிவகுமார் ஆகியோர் தினேஷை வரவேற்று அவருடன் சில நிமிடங்கள் பேசினர். மேலும் தினேஷ்குமாரின் மருத்துவசெலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக தினேஷின் பெற்றோரிடம் சூர்யா வாக்களித்தார். தினேஷுக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் இருப்பதை அறிந்த சிவகுமார் அவருக்கு தான் வரைந்த ஓவியம் ஒன்றை பரிசாக அளித்தார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பால் தினேஷ்குமாரும் அவருடைய குடும்பத்தினர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.