close
Choose your channels

ஏப்ரல் 7ல் ரிலீஸ் ஆகும் சூர்யா படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Thursday, March 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்நிலையில் இந்த படம் தற்போது ஓடிடியில் ஏப்ரல் 7ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது .

சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், இமான் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது என்பதும், இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் யூடியூப் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்ததை அடுத்து வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தற்போது சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய ஓடிடி தளங்களில் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கூறப்பட்டுள்ள சமூக மெசேஜ் அனைத்து குடும்பத்தினருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நிலையில் இந்த படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.