close
Choose your channels

அடுத்த நான்கு படங்களின் இயக்குனர்களை உறுதி செய்த சூர்யா!

Friday, January 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ மற்றும் ’ஜெய்பீம்’ ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அவர் ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த நான்கு படங்களின் இயக்குனர்கள் யார் யார் என்பதை சமீபத்தில் அளித்த பேட்டியில் சூர்யா உறுதி செய்துள்ளார். ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படமும், சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க அவர் திட்டமிட்டு உள்ளதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். எனவே சூர்யாவின் அடுத்த நான்கு படங்களை இயக்க உள்ள இயக்குனர்கள் பாலா, வெற்றிமாறன், சிறுத்தை சிவா மற்றும் சுதா கொங்காரா என்பது உறுதியாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.