close
Choose your channels

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர்: சஸ்பென்ஸை உடைத்த கார்த்தி

Monday, October 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த 'சூரரைப்போற்று' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அவர் அடுத்ததாக ஹரி, வெற்றிமாறன் மற்றும் சிறுத்தை சிவா ஆகிய மூவரில் ஒருவர் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சிறுத்தை சிவா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சூர்யா - சிவா படம் இப்போதைக்கு இல்லை என்பது உறுதியாயிற்று. அதனால் சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் அல்லது ஹரி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படத்தின் புரமோஷன் விழா ஐதராபாத்தில் இன்று நடந்தது. இந்த விழாவின்போது சூர்யாவின் அடுத்த படம் குறித்து சூர்யா ரசிகர்கள் கேள்வி கேட்க, அதற்கு கார்த்தி, சூர்யாவின் அடுத்த படத்தை ஹரி இயக்க உள்ளார் என்று தெரிவித்து சஸ்பென்சை உடைத்தார்.

ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய ஐந்து படங்களில் சூர்யா நடித்திருக்கும் நிலையில் தற்போது ஆறாவது முறையாக மீண்டும் சூர்யா-ஹரி இணையவுள்ளனர். சூர்யாவின் அடுத்த படம் குறித்த கார்த்தியின் இந்த அறிவிப்பால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.