close
Choose your channels

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்.. நடிகர் சூர்யாவின் மாஸ் பிளான்..!

Thursday, March 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன்,அஜித், விஜய், சூர்யா உள்பட ஒரு சிலர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு பத்துக்கு மேற்பட்ட கெட்டப்புகள் உள்ளது என்பதும் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் 3டி டெக்னாலஜிகள் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் அவர் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘வாடிவாசல்’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் சுதா கொங்காரா தற்போது 'சூரரை போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தை இயக்கி வருகிறார். அதேபோல் இயக்குனர் வெற்றி மாறன் ’விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களின் பணிகளில் உள்ளார். இருவருமே தங்களது படங்களை முடித்த பின்னர் சூர்யாவின் அடுத்த படங்களை இயக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.