close
Choose your channels

விஜய் பெற்றோருடன் சூர்யாவின் செல்பி !

Wednesday, March 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் நடிகர் சிவகுமார் என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது அனேகமாக செல்பியாகத்தான் இருக்கும். சிவகுமார் எவ்வளவோ கேட்டுக்கொண்டு ஆர்வக்கோளாறில் ஒருசிலர் அவரது அனுமதியின்றி செல்பி எடுக்க முயல்வதும், செல்பி எடுப்பவரின் போனை சிவகுமார் தட்டிவிடுவதும் பரபரப்பு செய்தியாக வெளிவந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் கார்த்தி அளித்த பேட்டியில் 'சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று செல்பி எடுப்பதே நாகரீகம்' என கூறினார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ஒரு இசை வெளீயிட்டு விழாவில் நடிகை கஸ்தூரிக்கும் இதே அறிவுரையை கார்த்தி கூறியிருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் தளபதி விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர்-ஷோபா தம்பதியுடன் நடிகர் சூர்யா எடுத்த செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செல்பியை விஜய்யின் பெற்றோர்களிடம் அனுமதி கேட்டே சூர்யா எடுத்திருப்பார் என நம்புவோம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.