close
Choose your channels

அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை': சூர்யாவின் அசத்தல் ரியாக்சன்

Friday, August 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை ஒரு நெகட்டிவ் விமர்சனம் கூட வெளிவந்ததாக தகவல்கள் இல்லை. மேலும் அஜித்தின் நடிப்பு மற்றும் எச்.வினோத்தின் இயக்கத்தை படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி நடுநிலை ரசிகர்களும் கோலிவுட் திரையுலக பிரபலங்களும் முதல் நாளே இந்த படத்தை பார்த்து தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் ஓபனிங் வசூல் பெரிய சாதனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' ரிலீஸ் ஆனதையடுத்து நடிகர் சூர்யா, நடிகர் அஜீத்துக்கும் இயக்குனர் வினோத்துக்கும் வாழ்த்து தெரிவித்து பொக்கே அனுப்பி உள்ளார். மேலும் இந்த படம் வெற்றி அடைய தனது வாழ்த்தையும் தனது கைப்பட கடிதம் எழுதி சூர்யா அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு முறை பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது பொக்கே அனுப்பி வாழ்த்து தெரிவித்திருப்பதை ஒரு வழக்கமாக வைத்திருக்கும் சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.