நமது கல்வி உரிமையைப் பாதுகாப்போம்: நீட் தேர்வு குறித்து சூர்யா அறிக்கை!

  • IndiaGlitz, [Saturday,June 19 2021]

நமது கல்வி உரிமையைப் பாதுகாப்போம் என்றும், ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் அகரம் பவுண்டேசன் சார்பில் நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது

அரசுப்பள்ளியில்‌ படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின்‌ வாழ்க்கை முன்னேற்றத்திற்கு “கல்வியே ஆயுதம்‌'. ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும்‌, பணம்‌. படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும்‌ இருக்கிற சூழலில்‌, தகுதியைத்‌ தீர்மானிக்க. “ஒரே தேர்வு முறை' என்பது சமூக நீதிக்கு எதிரானது.

எளிய குடும்பத்தினர்‌ கல்வி பெற ஆதாரமாக இருக்கும்‌ அரசு மற்றும்‌ அரசு உதவிப்பெறும்‌ பள்ளிகளில்‌ படிக்கும்‌ முறையே 40% மற்றும்‌ 25% மாணவர்களில்‌ 20% மாணவர்களே உயர்கல்விகளுக்கு செல்கின்றனர்‌. தங்கள்‌ எதிர்காலத்திற்காக 12 ஆண்டுகள்‌ பள்ளிக்கல்வி படித்த பிறகும்‌ நுழைவுத்‌ தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும்‌ என்பது கல்வித்‌ தளத்தில்‌ அவர்களை பின்னுக்குத்‌ தள்ளும்‌ சமூக அநீதி. 'நீட்‌ நுழைவுத்தேர்வு வைக்கப்படுவதன்‌ மூலம்‌ மருத்துவராக வேண்டும்‌ என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின்‌ கனவில்‌ தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காயத்தின்‌ வடுக்கள்‌ காலத்திற்கும்‌ மறையாது. மாணவர்‌ நலனுக்கும்‌, மாநில நலனுக்கும்‌ 'நீட்‌' போன்ற நுழைவுத்‌ தேர்வுகள்‌ ஆபத்தானவை.

தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன்‌ அவர்கள்‌ தலைமையிலான குழு, நீட்‌ தேர்வின்‌' பாதிப்புகள்‌ பற்றி மக்கள்‌ கருத்து தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது. அரசுப்‌ பள்ளிகளில்‌ படிக்கிற மாணவர்களுடன்‌ இணைந்து பயணிக்கிற அகரம்‌ ஃபவுண்டேஷன்‌, மாணவர்களுக்கான பாதிப்புகளை முறையாக அக்குழுவிடம்‌ பதிவு செய்கிறது.

நமது பிள்ளைகளின்‌ எதிர்காலத்தைக்‌ கேள்விக்குறியாக்கிய, 'நீட்‌ தேர்வின்‌' பாதிப்பின்‌ தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்தவேண்டும்‌. மாணவர்களும்‌, அவர்தம்‌ குடும்பங்களும்‌ அனுபவிக்கிற துயரங்களைத்‌ தவறாமல்‌ நீதிபதி ஏ.கே.ராஜன்‌ அவர்கள்‌ தலைமையிலான குழுவிடம்‌, neetimpact2021@gmail.com எனும்‌ மின்னஞ்சலுக்கு வருகின்ற ஜூன்‌ 23-ஆம்‌. தேதிக்குள்‌ பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள்‌ நிறைந்த நாட்டில்‌, கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம்‌. அது ஒன்றே, நிரந்தர தீர்வு. 'கல்வி மாநில உரிமை' என்கிற கொள்கையில்‌ அனைத்து அரசியல்‌ கட்சிகளும்‌ ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

ரவுடி பேபி சூர்யாவை கவனிங்க....!போலீசிடம் கோரிக்கை வைத்த நெட்டிசன்கள்....!

யுடியூபில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த பப்ஜி மதனை, நேற்று காவல் துறையினர் கைது செய்தனர்.

சுதந்திர இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுதந்த சாதனை நாயகன் உயிரிழப்பு!

இந்தியா சுதந்திரம் பெற்றப்பிறகு தடகளப் போட்டியில் வெற்றிப்பெற்று இந்தியாவிற்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுதந்தவர் மில்கா சிங்.

லூசிபர் இயக்குநரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு… இந்தப் படத்திலும் மோகன்லால் இருப்பாரா?

“லூசிபர்” வெற்றிக்குப் பிறகு நடிகர் பிருத்விராஜ் தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா புறப்பட்டார் ரஜினிகாந்த்: வீடியோ வைரல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் செல்வார் என்றும் அங்கு அவர் உடல் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு லைகா கொடுத்த மிகப்பெரிய தொகை!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் தமிழக மக்களை கொரோனாவில் காப்பாற்ற அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை