close
Choose your channels

கார்த்தி படக்குழுவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா!

Thursday, June 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது கார்த்தி, இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்தியுடன் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென நடிகர் சூர்யா விசிட் அடித்து படக்குழுவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து அவர் படக்குழுவினர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டு விடை பெற்றார்.

ஜோதிகா, கார்த்தி ஆகிய இருவரும் அக்கா தங்கையாகவும், இவர்களின் தந்தை கேரக்டரில் சத்யராஜும் நடித்து வரும் இந்த படத்தில் கிடாரி', 'வெற்றிவேல் படங்களில் நடித்த நிகிலா விமல் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றார். கோவிந்த் வசந்த் இசையில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.