close
Choose your channels

சூர்யாவின் திடீர் வெளிநாட்டு பயணம்: காரணம் இதுதான்

Saturday, June 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் பிசியான ஹீரோக்களில் ஒருவரான சூர்யா திடீரென தனது குடும்பத்துடன் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ மற்றும் ’வாடிவாசல்’ ’சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் என அதிக படங்களை கைவசம் வைத்துள்ள சூர்யா, தற்போது ஒரு சிறிய இடைவெளியில் கிடைத்துள்ளதை அடுத்து வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அங்கு சில நாட்கள் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு அதன் பிறகு திரும்பி வந்தவுடன் ‘சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வாடிவாசல் படத்தின் டெஸ்ட் படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட சூர்யா விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் சூர்யா திட்டமிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.