இந்திய நீதித்துறை குறித்து மீண்டும் டுவிட் போட்ட சூர்யா!

  • IndiaGlitz, [Saturday,September 19 2020]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் நீதித்துறை குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த அறிக்கைக்கு பெரும்பாலானோர் ஆதரவும் ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வந்ததால் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த அறிக்கையில் அவர் நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தைத் தெரிவித்தாகவும், அதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு சிலரும், நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று சில நீதிபதிகளும் கருத்து தெரிவித்தனர்

இதனையடுத்து நேற்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் பரிந்துரையின் அடிப்படையில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என தலைமை நீதிபதி அமர்வு முடிவு செய்தது. இருப்பினும் நீதித்துறை குறித்து சூர்யா பேசும்போது கவனமாக பேச வேண்டும் என்று அறிவுறுத்தியது

இந்த நிலையில் சற்று முன் நடிகர் சூர்யா நீதித்துறை குறித்து தனது டுவிட்டரில் மீண்டும் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய நீதித்துறையின் பெருந்தன்மை எனக்கு நிறைவை தருகிறது. எனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பு உள்ளது. இந்தியாவில் மக்களுக்கு இருக்கும் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை காக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறைதான். சென்னை ஐகோர்ட் கொடுத்த நியாயமான தீர்ப்பை தாழ்மையுடன், பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது

More News

டுவிட்டரில் விஜய்யின் செல்பி செய்த மகத்தான சாதனை!

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி புகைப்படம் டுவிட்டரில் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இதுதான் எங்க தலைவர், குருவே சரணம்: ரஜினி குறித்து ராகவா லாரன்ஸ்

மும்பையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இனி பிழைக்க மாட்டோம் என்று நினைத்து அவர் ரஜினிக்கு பதிவு செய்த டுவிட்டில்

சீனாவில் பரவும் புதிய பாக்டீரியா நோய்!!! கொரோனா மாதிரி இதுவும் ஆபத்தானதா?

கடந்த சில தினங்களாக சீனாவில் ப்ரூசெல்லோசிஸ் எனப்படும் புதிய பாக்டீரியா நோய் மனிதர்களுக்குப்

தனது ஸ்கூட்டரை நடமாடும் வகுப்பறையாக மாற்றிய ஆசிரியர்… குவியும் பாராட்டுகள்!!!

கொரோனா தாக்கத்தால் மாணவர்களின் கல்வி முறையே முற்றிலும் மாறியிருக்கிறது

150 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த காரில் ஓட்டுநர், சகபயணிகளும் மணிக்கணக்காக தூங்கிய அதிர்ச்சி சம்பவம்!!!

கனடாவின் அல்பர்டா பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரைப் பார்த்து