close
Choose your channels

ஜல்லிக்கட்டு வீரராகவே மாறிவிட்ட சூர்யா: 'வாடிவாசல்' படப்பிடிப்பின் மாஸ் புகைப்படம்!

Monday, March 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ என்ற திரைப்படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு நேற்று ஈசிஆர் பகுதியில் நடைபெற்றதாகவும், இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்..

இந்த நிலையில் தற்போது இந்த ஒத்திகை படப்பிடிப்பு குறித்த மேலும் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் சூர்யா அசல் ஜல்லிக்கட்டு வீரராகவே மாறி தோற்றமளிக்கும் காட்சி உள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கனவே ‘வாடிவாசல்’ படத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் சூர்யா பழகி வருகிறார் என்றும் இதற்காக பிரத்யேகமாக ஜல்லிக்கட்டு வீரர்களிடம் பயிற்சி பெற்று வருகிறார் என்றும் செய்திகள் வெளியானது.

கிராபிக்ஸ் மற்றும் டெக்னிக்கல் காட்சிகள் இன்றி நிஜமாகவே ஜல்லிக்கட்டு காளைகளுடன் மோதும் காட்சியில் சூர்யா நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.