close
Choose your channels

மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்: நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவின் வீடியோ!

Saturday, September 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஞாயிறன்று நீட்தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த நீட் தேர்வின் அச்சம் காரணமாக ஏற்கனவே ஒரு மாணவர் மற்றும் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதும் ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நீட் தேர்வு எழுதிய பல மாணவர்கள் மதிப்பெண் குறைவாக கிடைக்குமோ என்ற அச்சத்தில் இருக்கும் நிலையில் தமிழக அரசு, நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் தொலைபேசி மூலம் கவுன்சிலிங் செய்ய ஏற்பாடு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் சூர்யா இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியபோது, ‘மதிப்பெண் தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல என்றும் நம்பிக்கையோடு தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் அனைவரும் ஜெயிக்கலாம் என்றும், பெரிதாக ஜெயிக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் மாணவர் மாணவியர் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ஒரு தேர்வு உங்களது உயிரை விட பெரியது அல்ல என்றும், எந்த ஒரு கவலையானாலும் சில காலத்துக்கு பிறகு குறைந்துவிடும் என்றும், அதனால் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். நடிகர் சூர்யாவின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.