மாறி மாறி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் வனிதா-சூர்யாதேவி

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திரையுலகினர் ஒருசிலரும், சூர்யா தேவி என்ற பெண்ணும் பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூர்யா தேவி மீது வனிதா விஜயகுமார் காவல்துறையில் புகார் அளித்தார். தனது திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சூர்யாதேவி விமர்சித்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வனிதா விஜயகுமார் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வனிதா மீது சூர்யாதேவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னைப்பற்றி வனிதா விஜயகுமார் அவதூறாக பேசியதாக வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே வனிதா திருமணம் குறித்து பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ்க்கு எதிராக தங்கள் உயிரையும் பணயம் வைத்து காவல் துறையினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் வனிதா விஜயகுமாரின் திருமணம் குறித்தும் அதன் பின்னர் எழுந்த சர்ச்சை குறித்தும் மாறி மாறி காவல் துறையில் புகார் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை: பிளஸ் 2 ரிசல்ட் குறித்து கமல்ஹாசன்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளிவந்தது என்பதும், மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் இணையதளங்களில் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொண்டனர்

ஷாலினி அஜீத் முன்னணியில் கௌரவிக்கப்பட்ட விஜய்-சங்கீதா: வைரலாகும் புகைப்படங்கள்

தளபதி விஜய் மற்றும் சங்கீதா திருமணம் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி நடைபெற்றது என்பது தெரிந்ததே. இன்னும் ஒருசில நாட்களில் விஜய்-சங்கீதாவின் திருமண நாள் வரவுள்ளது.

ஜோலி முடிஞ்சது… 25 ஆயிரம் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனம்!!!

கொரோனா ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியால் உலகின் பெரும்பலான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.

புபோனிக் பிளேக் நோய்த்தொற்றால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு!!! பரபரப்பு சம்பவங்கள்!!!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீனாவின் மங்கோலியா மாகாணப் பகுதியில் ஒரு புதிய நோய்த்தொற்று பரவுவதாகச் செய்திகள் வெளியாகியது.

எத்தனை நாள் தான் வீட்டில் சும்மா இருப்பது? விளம்பர படத்தில் நடித்த நயன்தாரா

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு நடைபெறாததால் மாஸ் நடிகர்கள் முதல் துணை நடிகர்கள் வரை படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் சும்மா இருக்கிறார்கள்.