இயக்குனர் சுசீந்திரன் படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Wednesday,August 16 2017]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் சமீபத்தில் 'அறம் செய்து பழகு' என்ற தனது அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் நேற்று திடீரென மாற்றப்பட்டுள்ளது.

'அறம் செய்து பழகு' என்ற டைட்டிலுக்கு பதிலாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்ற புதிய டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை இயக்குனர் சுசீந்திரன் தனது சமூக வலைத்தளத்திலும் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் புதிய டைட்டிலுடன் கூடிய போஸ்டர் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

விக்ராந்த், சந்தீப் கிஷான், சூரி, மெஹ்ரின் பிர்ஜிதா, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். லட்சுமண் குமார் ஒளிப்பதிவில், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அன்னை பிலிம் பேக்டரீஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

'விவேகம்' புதிய ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் இருந்து விலகி முழு ஓய்வு எடுத்து வருகிறார்...

இதுதான் இன்றைய மிகச்சிறந்த படம்: கமல்ஹாசன் பெருமிதம்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்றைய சுதந்திர தினத்தில் அரசியல் குறித்த சில பதிவுகளை தெரிவித்திருந்தாலும், சுதந்திர தினம் குறித்தும் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்...

முதல்முறையாக முதல்வரின் ராஜினாமா குறித்து பேசிய கமல்!

கடந்த சில மாதங்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளம் மூலம் அரசியல் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்...

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றாரா குத்தாட்ட நடிகை?

பிக்பாஸ் வீட்டில் இருந்து சக்தி வெளியேறவுள்ளார் என்பதை கடந்த சனிக்கிழமை அன்றே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்...