தனுஷூக்கு இருந்த பிரச்சனை சுஷாந்த் சிங்கிற்கு இருந்ததா? பிரபல எழுத்தாளர் அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,June 16 2020]

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரை உலகையே குலுக்கியது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் எழுத்தாளரும், சுஷாந்துக்கு நெருக்கமானவருமான சுகரித்தா செங்குப்தா என்பவர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே மனநிலை சரியில்லாமல் சுஷாந்த் மன அழுத்தத்துடன் இருந்ததாகவும், அதனால் தான் அவரது காதலி ரேஹா அவரை விட்டு விலக நேரிட்டதாகவும் கூறினார்

சில சமயம் சுஷாந்த் சிங் மன சோர்வை வெளிப்படுத்துவார் என்றும் அதற்காக அவர் மருத்துவரை சந்தித்து மருந்துகளை வாங்கிக் கொண்டாலும் மருந்துகளை சரியாக எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த நோயை மருந்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று காதலி ரேஹா உள்பட பலர் வற்புறுத்தியும் சுஷாந்த் சிங், யார் பேச்சையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்

மருந்துகள் தொடர்ச்சியாக சாப்பிடாததால் அவரது மன அழுத்தம் அதிகரித்து இருந்ததாகவும் கடந்த ஒரு வருடமாகவே சுஷாந்த் சிங் தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டார் என்றும் ரேஹா மட்டுமே தொடர்பு இருந்ததாகவும் கூறியுள்ளார்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’3’ படத்தில் தனுஷின் கேரக்டர் இவ்வாறுதான் அமைக்கப்பட்டிருக்கும். அந்த கேரக்டருக்கு பல குரல்கள் கேட்க தொடங்கியதால் எங்கே தான் தன்னுடைய மனைவியையே கொலை செய்து விடுவோமோ என்று பயந்து தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்வது போன்று அந்த படம் முடிக்கப்பட்டிருக்கும். அதேபோல் சுஷாந்த் சிங்கிற்கு சிலசமயம் பல குரல்கள் கேட்கத் தொடங்கியதாகவும் அந்தக் குரல்கள் அவரை கொலை செய்ய முயற்சிப்பதை அவர் உணர தொடங்கியதாகவும் எழுத்தாளர் சுகரித்தா செங்குப்தா கூறியுள்ளார்.

சுஷாந்த் சிங்கிற்கு பல குரல்கள் கேட்டதால் ஏற்பட்ட மன அழுத்தமே அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் எழுத்தாளர் சுகரித்தா செங்குப்தா கூறியுள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது