close
Choose your channels

அமித்ஷாவிடம் கைகூப்பி கோரிக்கை விடுத்த சுஷாந்த் சிங் காதலி!

Thursday, July 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் மன அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பாலிவுட் திரை உலகையே உலுக்கியது. அவரது தற்கொலைக்கு பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது என்பதும் இதுகுறித்து பிரபல நடிகர், நடிகைகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து விசாரணை செய்த மும்பை போலீசார் ’அது தற்கொலை தான் என்றும், கொலை இல்லை என்றும் முடிவு செய்துள்ளனர். இருப்பினும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியபோது ’தான் சுஷாந்த் சிங்கின் காதலி என்றும் சுஷாந்த் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தான் கைகூப்பி கேட்டுக் கொள்வதாகவும், அரசு மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும், அமித்ஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் சுஷாந்த் சிங்கிற்கு என்ன அழுத்தம் இருந்தது? அவர் ஏன் தற்கொலை முடிவை தேர்ந்தெடுத்தார் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே சிபிஐ விசாரணையை கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடிகை ரியா சக்கரவர்த்தியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.