close
Choose your channels

சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் கைது: பாலியல் விவகாரத்தில் உடந்தையா?

Friday, June 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா என்பதும், அவர் மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதை அடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசங்கர் பாபாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சுசில்ஹரி பள்ளியில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர் என்பதும் அவரது ரகசிய தனி அறையை கண்டுபிடித்து அந்த அறைக்கு சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி சிவசங்கர் பாபாவின் மூன்று பெண் பக்தர்களை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்தனர் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் அந்த மூவரில் ஒருவரான சுஷ்மிதா என்ற பெண் பக்தர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாலியல் விவகாரத்தில் சிவசங்கர் பாபாவுக்கு பெண் பக்தர் சுஷ்மிதா உடந்தையாக இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசாரின் கைது நடவடிக்கை மேலும் தொடரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.