கமல் லட்டரை படிச்சு முடிக்கிறதுக்குள்ள கொரோனாவே போயிடும்: பாஜக பிரபலம் கிண்டல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி வரை இருக்கும் என்று அவர் தெரிவித்ததை அடுத்து தற்போது ஊரடங்கு உத்தரவு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் ஒரு நீண்ட கடிதத்தை பிரதமருக்கு எழுதினார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தால் பொது மக்கள், குறிப்பாக ஏழை எளிய, நடுத்தர மக்கள் மிகுந்த கஷ்டப்படுவதாகவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மக்கள் பட்ட கஷ்டத்தை விட மிக மோசமான பாதிப்பு பிரதமரின் இந்த ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையால் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கிட்டத்தட்ட ஆறு பக்கங்கள் கொண்ட கமல்ஹாசனின் நீண்ட கடிதத்தை சமூக ஆர்வலர்கள் பலர் பாராட்டினாலும் பாஜகவினர் ஒருசிலர் கிண்டலடித்து வருகின்றனர். பிக்பாஸ் போட்டியாளரும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் கூட தனது டுவிட்டரில் கமல்ஹாசன் கடிதம் கொடுத்து கிண்டலடித்து இருந்தார் என்பதை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கமலஹாசனின் பெரிய லெட்டர் கொடுத்து கிண்டலடித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: இவ்வளவு பெர்ர்ரிய லெட்டரை மோடி அவர்கள் படிக்கிறத்துக்குள்ள கொரானாவே உலகத்தை விட்டு போயிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார். எஸ்வி சேகரின் இந்த டுவிட்டுக்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரெண்டு அப்பாவி பசங்கள ஏமாத்தியிருக்கேன்: விஜே மணிமேகலையின் வைரல் வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது முதல் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் முக்கிய நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் விளையாட்டுத்தனமான

இரண்டே வாரத்தில் டேமேஜ் ஆன சென்னை மால் திரையரங்குகள்: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

வெறும் 9 நாட்களில் பிரிட்டன் அரசு உருவாக்கிய பிரம்மாண்ட மருத்துவமனை!!!

கொரோனா வைரஸின் மையப்பகுதியாக தற்போது ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன

பள்ளி, கல்லூரிகள் திறப்பது எப்போது? மத்திய அரசின் முக்கிய பரிந்துரை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் 24ஆம் முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

சொந்த வீட்டில் நகை திருடிய மனைவி: அவமானத்தில் கணவர் தற்கொலை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் துறைமுகத்தில் பணிபுரிந்து வரும் வின்சென்ட் என்பவரின் மனைவி ஜான்சிராணி சொந்த வீட்டிலேயே 120 பவுன் நகைகளை திருடியதாவும் அதன்பின் போலீஸ் விசாரணையில்