close
Choose your channels

ரஜினி முதல்வர் ஆவார்! பாஜக தயவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது: பிரபல நடிகர்

Tuesday, October 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி பங்கேற்று முதல்வர் ஆவார் என்றும், பாஜக தயவின்றி இனி தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எஸ்வி சேகர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக தலைமையில் மாற்றம் வரும் என்று நான் ஏற்கனவே கூறினேன். அதன்படி மாறிவிட்டது. புதிய தலைமை யார் என்பதை விரைவில் டெல்லி தலைமை முடிவு செய்யும்

மேலும் ரஜினி கண்டிப்பாக வரும் தேர்தலில் பங்கேற்பார். அவர் முதலமைச்சராக கூடிய வாய்ப்பும் அதிகம் இருக்கிறது என்பது என்னுடைய கருத்து. மேலும் பாரதிய ஜனதா கட்சி கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். அதே போல பாரதிய ஜனதா கட்சியின் தயவு இல்லாமல் எந்த கட்சியும் இனி தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று எஸ்.வி.சேகர் கூறினார். எஸ்.வி.சேகரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.