டார்ச்லைட் இருந்தால் போதுமா, பேட்டரி வேண்டாமா? கமல்ஹாசனை கலாய்த்த பாஜக பிரமுகர்

உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘பிரதமர் விளக்கேற்ற சொன்னது குறித்து கூறியபோது, ‘பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்’ என்று தெரிவித்தார். கமலின் இந்த கருத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘சில சமயம் நம்ம படத்துல அதிகம் எதிர்பார்த்து ஏமாந்தது மாதிரி இல்ல இது. வெறும் டார்ச்லைட் கையில இருந்தா போதாது. அது பிரகாசமா எரிய பாட்டரி தேவை. அதுதான் நம் பிரதமர். இந்த 21 நாள் தேசத்திற்கே ஊரடங்கு. இதில் அரசியல் எதற்கு? உங்கள் ஆலோசனைகளை பிரதமரிடமே தெரிவிக்கலாமே’ என்று தெரிவித்தார்.

எஸ்.வி.சேகரின் இந்த பதிலுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் வழக்கம்போல் பதிவாகி வருகிறது.

More News

இசைக்காக 288 நாட்கள் பட்டிணிப்போராட்டம்!!! கோரிக்கை நிறைவேறாமலே உயிர்பிரிந்த அவலம்!!!

துருக்கியில் ஒரு பெண் இசைக்கலைஞர் 288 நாட்கள் பட்டிணிப் போராட்டத்திற்குப் பின்பு நேற்று உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பேசினால் கூட பரவுமா??? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி!!!

“கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் வெளிப்படும் நீர்துளிகள் மூலம் பரவலாம்”, எனவே எச்சரிக்கைக்காக மாஸ்க் அணிவது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது.

''வடகொரியாவில் கொரோனா தொற்று இல்லை'' உண்மை நிலவரம் என்ன???

கொரோனா தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் அலறிக்கொண்டிருக்கும் போது ஒரு நாடு மட்டும் ஏவுகளை சோதனைகளை நிகழ்த்திக்கொண்டு மிகவும் அமைதியாக இருக்கிறது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின்விளக்குகளை அணைத்தால் என்ன நடக்கும்???

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இருக்கும் மின்விளக்கை அணைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து, இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய மருத்துவர்கள்!!!

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அவலம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வருகிறது.