நிதியானந்தா உயிரிழந்துவிட்டாரா? ரூ.4000 கோடி சொத்து அந்த நடிகையின் கட்டுப்பாட்டிலா?


Send us your feedback to audioarticles@vaarta.com


நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக அவருடைய சகோதரி மகன் அறிவித்துள்ள நிலையில், அவரது அறக்கட்டளைக்கு சொந்தமான ₹4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், அவரது ஆசிரமத்தில் இருந்த ஒரு நடிகையின் கட்டுப்பாட்டிற்கு வந்து இருக்கலாம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா, சிறுவயதில் கர்நாடக மாநிலத்திற்கு சென்று அங்கு ஆசிரமம் அமைத்தார். அதன் பின்னர் நாடு முழுவதும் 41 இடங்களில் ஆசிரமம் அமைத்த அவர், ஏராளமான சொத்துக்கள் குவித்தார்.
இந்த நிலையில், திடீரென பாலியல் புகாரில் சிக்கிய நிலையில், அவர் தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து நாட்டிலிருந்து வெளியேறிய நித்யானந்தா, "கைலாசா" என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அது உலகில் உள்ள இந்துக்களுக்கான ஒரே நாடு என்றும் தெரிவித்தார்.
கைலாசா நாட்டில் இருந்து கொண்டே அவர் கலை வெளியிட்டு வந்த நிலையில், சமீப காலமாக அவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது அவருடைய சகோதரி மகன், நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவரது அறக்கட்டளைக்கு சொந்தமான ₹4000 கோடி சொத்துக்கள், அவரது ஆசிரமத்தில் இருந்த பிரபல நடிகை கையில் இருப்பதாக கூறப்படுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தா, போலி சாமியாராக செயல்பட்டு கொண்டிருந்த நிலையில், அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தினாலும், அவரது மரணம் குறித்து உறுதியான செய்தி இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments