close
Choose your channels

லண்டன் பெண்ணை மணக்கின்றாரா சிம்பு? டி.ராஜேந்தர்-உஷா தம்பதிகள் விளக்கம்

Sunday, June 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்புவுக்கு திருமணம் விரைவில் நடக்கும் என அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான டிவிடி கணேஷ் உள்பட பலர் கூறிவந்தனர். அவருடைய பெற்றோர் சிம்புவிற்கு உறவினர்கள் மத்தியில் பெண் பார்த்து வருவதாகவும் விரைவில் திருமண அறிவிப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக லண்டனைச் சேர்ந்த ஒரு பெண், சிம்புவை திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் டிராஜேந்தர் குடும்பத்திற்கு தூரத்து உறவினர் என்றும், லாக்டவுன் முடிந்ததும் இந்த திருமணம் நடைபெறும் என்றும் பரபரப்பாக செய்தி வெளியானது.

நடிகர் சிம்பு பல நடிகைகளை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டாலும் தற்போது அவர் லண்டன் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த செய்தியை சிம்புவின் பெற்றோர்களான டி.ராஜேந்தர் மற்றும் உஷா மறுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை. எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதனையடுத்து சிம்பு, லண்டன் பெண்ணை மணக்கவிருப்பதாக வெளிவந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.