நான் சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள்? ரஜினி கமல் குறித்து சினிமா பிரபலம் 

  • IndiaGlitz, [Thursday,November 21 2019]

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் போது நிலையில் இருவரும் இணைந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ரஜினி, கமல் இணையும் அரசியல் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா பிரபலங்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து லட்சிய திமுக தலைவரும் சினிமா பிரமுகருமான டி.ராஜேந்தர் அவர்கள் இது குறித்து கூறிய போது, ’ரஜினி,கமலை விட அரசியலில் சீனியர் நான். அரசியல் குறித்து அவர்கள் எடுக்கும் முடிவு குறித்து தான் எந்த கருத்தும் கூற முடியாது. அப்படியே எந்த கருத்து கூறினாலும் அதை யார் கேட்கபோகிறார்கள் எனவும் டி.ராஜேந்தர் கூறினார்.

மேலும் நண்பர்கள் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் தான் போட்டியிடுயுள்ளதாகவும் சினிமாவை காப்பாற்ற யாரை வேண்டுமானாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.