சுஷாந்த் உயிருடன் இருந்தால் இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பார்: தனுஷ் நாயகியின் அதிர்ச்சி டுவீட்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தற்போது போதைப்பொருள் வழக்காக மாறி வருவது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் தற்கொலைக்கு காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்ட அவரது காதலியும் நடிகையுமான ரியா, திடீரென நேற்று போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ரியா கைது குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்ஸி பதிவு செய்த ஒரு டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது டுவிட்டில் கூறியதாவது:

நடிகை ரியா, சுஷாந்துக்கு தெரியாமல் போதைப்பொருளை தேநீரில் கலந்து கொடுத்தார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் அதில் ஒரு திருத்தம். சுஷாந்த் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் அவர் சிறையில் கம்பி எண்ணி கொண்டு இருப்பார் என பதிவு செய்துள்ளார். சுஷாந்த் குறித்த டாப்ஸியின் இந்த டுவிட் சுஷாந்த் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 

More News

'இந்தி தெரியாது போடா' டீசர்ட்: ஆர்டர் கொடுத்தது கனிமொழி, உற்பத்தி செய்து கொடுத்தது திமுக நிர்வாகி!

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்டான 'இந்தி தெரியாது போடா' மற்றும் 'ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்' ஆகிய வாசகங்களை கொண்ட டீசர்ட்களை திரையுலக பிரபலங்கள் அணிந்தது

நீங்கள் தேர்வு செய்த வழி சரியானது: பிசி ஸ்ரீராமுக்கு கங்கனா பதிலடி!

பிரபல நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகிறார். சுஷாந்த் தற்கொலை உள்பட அவர் கூறிய சில கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்

இதைவிட நடிகைகளின் கைது செய்தி முக்கியமா? அன்புமணி ஆதங்கம்

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து உயிரிழந்த மாணவரின் செய்தியை விட நடிகைகளின் கைது செய்தி முக்கியமா? என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆதங்கத்துடன்

3 மாதமா விவசாயமே பார்க்கல… ரூ.3.71 கோடி மின்கட்டணம்!!! அதிர்ச்சி தகவல்!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் உதயப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெமாரம் மனதங்கி எனும் விவசாயிக்கு மின்சார வாரியத்தில் இருந்து ஒரு விவரப்பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கிறது.

தூற்றியவர்களுக்கு மத்தியில் சாதித்த தமிழன்- மூலிகை பெட்ரோல் உற்பத்திக்கு வேறு மாநிலத்தில் அனுமதி!!!

தமிழகத்தைச் சேர்ந்த ராமர் பிள்ளை என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மூலிகைப் பொருட்களில் இருந்து பெட்ரோல் தயாரிக்க முடியும் என்ற தனது புதிய கண்டுபிடிப்பைக் குறித்து