டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் 6வது மாடியில் இருந்து குதிக்க முயற்சித்ததால் பரபரப்பு

டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்துகொண்டு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மத மாநாடொன்றில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர்களில் பரிசோதனை செய்யப்பட்ட பலருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் இருந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஆறாவது மாடியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் திடீரென அவர் அந்த அறையின் ஜன்னலில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்,

இந்த நிலையில் அந்தப் பக்கமாக வந்த மருத்துவர் ஒருவர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்றினார். தற்போது அந்த நபருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்றாக காற்று வர வேண்டும் என்பதற்காக ஜன்னலை திறந்து வைத்திருந்தாகவும் கொரோனா பாதிக்கப்பட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டு அவர் திறந்திருந்த ஜன்னல் வழியாக குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

மத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்தும் நேரமல்ல இது: ஏ.ஆர்.ரஹ்மான்

டெல்லியில் சமீபத்தில் நடந்த மத வழிபாட்டுத் தலத்தில் கலந்துகொண்டவர்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின்

பீச்சில் பார்ட்டி, கும்மாளம் அடித்த 70 மாணவ, மாணவிகள்: 44 பேர்களுக்கு பாசிட்டிவ்

கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதற்கு அந்நாட்டினர்கள் பொறுப்பு இல்லாமல் இருப்பதே காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வரும்

வெளியூரில் மாட்டிக்கொண்ட மகன்: தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியூரில் மகன் மாட்டிக்கொண்டதால், மரணமடைந்த தந்தைக்கு அவரது மகளே இறுதிச் சடங்கு செய்த சோகமான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது 

கொரோனா குறைவான எண்ணிக்கையில் தப்பித்துக்கொண்ட நாடுகள்???  எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!!

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி உலகச்சுகாதார நிறுவனத்தால் உலகச்சுகாதார நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா

கொரோனா இருப்பதாக வதந்தி: தற்கொலை செய்து கொண்ட மதுரை வாலிபர் 

தனக்குக் கொரோனா பாதிப்பு இருப்பதாக தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ பரப்பியதால் விரக்தி அடைந்த மதுரை இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை