close
Choose your channels

22 கேமிரா வைத்து உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை பிளந்த மனைவி!

Wednesday, May 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன்மீது சந்தேகப்பட்டு கேமிராக்கள், தனியார் துப்பறியும் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை உடைத்த மனைவி குறித்த பரபரப்பான செய்தி வெளிவந்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் சுதர்சன். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணத்திற்காக பெண் பார்க்க சென்றார். ஆனால் பெண்ணை விட பெண்ணின் தங்கை தனக்கு பிடித்துள்ளதாக கூறவே, பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். பெண்ணின் தங்கை தற்போது கல்லூரியில் படித்து கொண்டிருப்பதாகவும், அவருக்கு திருமணம் செய்ய இன்னும் மூன்று வருடங்கள் ஆகும் என்று அவர்கள் கூறினர். அதன்பின்னர் மூன்று வருடங்கள் காத்திருந்து அந்த பெண்ணையே சுதர்சன் 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சுதர்சன் தனது மனைவியின் நடத்தையில் கடந்த சில மாதங்களாக சந்தேகம் அடைந்தார். இதனையடுத்து மனைவியை கண்காணிக்க வீட்டில் 22 கேமிராக்களை பொருத்தினார். மேலும் ஸ்பைவேர் சாப்ட்வேர் மூலமும், தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமும் மனைவியை அவர் உளவு பார்த்துள்ளார். ஒரு கட்டத்தில் இது அவருடைய மனைவிக்கு தெரிந்துவிட்டது.

எந்தவித தவறும் செய்யாத தன்னை கணவர் உளவு பார்ப்பதை அறிந்து ஆத்திரமடைந்த அவர் தனது மகனின் கிரிக்கெட் பேட்டை எடுத்து கணவரின் மண்டனையில் சரமாரியாக அடித்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சுதர்சனுக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் சுதர்சன் புகார் செய்யவே இருவரும் கவுன்சிலிங் செல்ல போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து சுதர்சனை அவரது மனைவி விவகாரத்து செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.