பிரபல நடிகை தமன்னா மீது வழக்கு… காரணம் இதுதான்…

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்டு வரும் “மாஸ்டர் செஃப்“ எனும் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கிவந்தார். இந்நிலையில் நடிகை தமன்னாவை அந்நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலக்கிவிட்டு வேறொருவரை தொகுப்பாளராக தயாரிப்பு நிறுவனம் நியமித்தது.

இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை தமன்னா, தன்னை திடீரென்று நீக்கியது தவறு என்றும் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் நடிகை தமன்னா கூறிய கருத்துகளை மறுத்து இருக்கிறது. அதோடு “மாஸ்டர் செஃப்“ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நடிகை தமன்னாவிற்கு ரூ.2 கோடி சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் ஜுன் 24 முதல் செப்டம்பர் இறுதிக்குள் இந்த நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி நடிகை தமன்னா 18 நாட்கள் ஷுட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நடிகை தமன்னா வேறுபணிகளுக்கு சென்று “மாஸ்டர் செஃப்“ நிகழ்ச்சிக்கான ஷுட்டிங்கில் கலந்துகொள்ளாமல் இருந்ததால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் இதுவரை நடிகை தமன்னாவிற்கு ரூ.1.50 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் மீதமுள்ள நிகழ்ச்சிக்கு ரூ.50 லட்சம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் விளக்கி இருக்கிறது. அதோடு நிகழ்ச்சி முடியவேயில்லை என்பதையும் தயாரிப்பு நிறுவனம் சுட்டிக் காட்டியிருக்கிறது.

More News

இந்திய அணிக்கு அடித்த ஜாக்பாட்… அரை இறுதிக்கு முன்னேறுமா?

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா முதல் போட்டியிலேயே படு மோசமாக தோல்வியைத் தழுவியது.

நான் அடக்கமா இல்லையா? சிபியுடன் மல்லுகட்டும் தாமரை!

பிக்பாஸ் வீட்டில் நகரத்தார் மற்றும் கிராமத்தார் என்ற டாஸ்க் கடந்த 2 நாட்களாக நடந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் விவாத மேடை ஒன்று நடக்க இருப்பதாக பிக்பாஸ் அறிவிக்கின்றார்

ஆர்யன்கானுக்கு ஜாமின் கிடைத்தது எப்படி? மும்பை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் சற்று முன் ஜாமீன் அளித்துள்ள நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

டீ காக்கை விளாசிய பொல்லார்ட்… ரசிகர்களே அதிர்ந்த சம்பவம்!

டி20 உலகக்கோப்பை போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் அனைவரும்

சமந்தா தாக்கல் செய்த அவதூறு வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு!

தனது சொந்த வாழ்க்கை குறித்து அவதூறாக வீடியோ பதிவு செய்த யூட்யூப் சேனல்களுக்கு எதிராக ஹைதராபாத் நீதிமன்றத்தில் சமந்தா பதிவு செய்த வழக்கில் அதிரடி உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.