தமன்னாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு! சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்!

  • IndiaGlitz, [Saturday,September 19 2020]

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஜொலித்து வரும் நடிகை தமன்னா. இவர் நடித்த ’ஆக்சன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அதன்பின்னர் அவர் தமிழில் நடிக்க கமிட் ஆகவில்லை.

ஆனால் அதே நேரத்தில் இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஏற்கனவே தமன்னா நடிப்பில் உருவான ‘தட் இஸ் மகாலட்சுமி’ என்ற தெலுங்கு திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்தி, தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான ‘அந்தாகான்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். தபு வேடத்தில் தமன்னாவும், ஆயுஷ்மான் வேடத்தில் நிதினும், ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷ் ஆகியோர்களும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை மெர்லபகா காந்தி இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே மூன்று தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் விரைவில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

 

More News

கொரோனா சிகிச்சையில் சிறந்து விளங்கும் தமிழக மருத்துவமனைகள்… விருது பெற்று சாதனை!!!

இந்திய அளவில் அதிக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலமாகத் தமிழ&

கொள்ளையடித்த தங்கச் செயினை டிவி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்த பாசக்கார திருடன்!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

கன்னட மொழியில் ஒளிபரப்படும் ஒரு தனியார் டிவி நிறுவனத்திற்கு பார&

வெறுமனே 90 நிமிடத்தில் துல்லியமான கொரோனா ரிசல்ட்… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!!!

இதுவரை கொரோனா பரிசோதனைக்கு RTPCR சோதனை கருவியை மட்டுமே உலக நாடுகள் நம்பியிருக்கின்றன

முந்தானை முடிச்சு' ரீமேக்: ஊர்வசி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த 'முந்தானை முடிச்சு' திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் 37 ஆண்டுகள் கழித்து

வாடிவாசல் நாயகனே, வாருங்கள் அரசியலுக்கு: சூர்யா ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்!

'வாடிவாசல் நாயகனே வாருங்கள் அரசியலுக்கு' என சூர்யாவின் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது