ரசிகரை தள்ளிவிட்ட பவுன்சர்கள் .. தமன்னாவின் மனிதாபிமான செயல்..!

  • IndiaGlitz, [Sunday,August 06 2023]

தன்னை சந்தித்து செல்பி எடுக்க வந்த ரசிகரை தமன்னாவின் பவுன்சர்கள் தள்ளிவிட்ட நிலையில் தமன்னா மனிதாபிமானமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சினிமா நட்சத்திரங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அவர்களை பார்க்கவும் செல்பி எடுத்துக் கொள்ளவும் ரசிகர்கள் முண்டியடிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதே நேரத்தில் சினிமா நட்சத்திரங்களை நெருங்க விடாமல் பவுன்சர்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை தமன்னா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த போது பவுன்சர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அப்போது பவுன்சர்கள் பாதுகாப்பையும் மீரி ஒரு இளைஞர் தமன்னாவிடம் சென்று அவருடைய கையை பிடித்து செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது பவுன்சர்கள் அந்த இளைஞரை பிடித்து தள்ளிய போது தமன்னா அவர்களை கடிந்து கொண்டதோடு அந்த ரசிகரை அருகே வரவழைத்து அவருக்கு செல்பி எடுக்க போஸ் கொடுத்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தமன்னாவின் மனிதாபிமானத்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More News

மீண்டும் கிளாமருக்கு மாறிய ரம்யா பாண்டியன்.. வேற லெவல் போட்டோஷூட்..!

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த சில நாட்களாக  கோவில் கோபுரம் அருகே சேலை கட்டிய புகைப்பட போட்டோஷூட் மற்றும்  மாடர்ன் உடைகளில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த

சென்னை பல்கலையில் ஃபர்ஸ்ட் ரேங்க்.. ஜனாதிபதியிடம் பட்டம் பெற்ற குக் வித் கோமாளி பிரபலம்..!

சென்னை பல்கலைக்கழகத்தின் ஃபர்ஸ்ட் ரேங்க் என்ற பெருமையுடன் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடம் இன்று குக் வித் கோமாளி பிரபலம் பட்டம் பெற்றுள்ளதை அடுத்து இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல்

'ஜெயிலர்' முன்பதிவு.. ஒரு சில நிமிடங்களில் காலியான டிக்கெட்டுக்கள்.. 2வது முன்பதிவில் ஒரு ஆச்சரியம்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் பத்தாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இன்று காலை இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியது.

மீண்டும் படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்ற 'லியோ' படக்குழு.. ஆடியோ விழா எப்போது?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இலியானாவுக்கு திருமணம் நடந்தது எப்போது? குழந்தை பிறந்த பின் வெளியான தகவல்..!

நடிகை இலியானா திருமண அறிவிப்பை வெளியிடாமலேயே  கர்ப்பம் குறித்த தகவலை வெளியிட்டது அவரது ரசிகர்களுக்கு பெரும்  பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது குழந்தை பிறந்த பிறகு அவரது திருமணம்