சமந்தாவுடன் முதல்முறையாக இணையும் தமன்னா!

  • IndiaGlitz, [Wednesday,December 09 2020]

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தா மற்றும் தமன்னா ஆகிய இருவரும் ஒரு படத்தில் கூட இன்னும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா நடித்த தெலுங்கு படம் ஒன்றில் தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி உள்ளார் என்பதை தவிர இருவரும் இணைந்து கேரக்டர்களில் நடிக்க வில்லை என்பது ரசிகர்களுக்கு ஒரு குறையாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் அந்தக் குறையைப் போக்கும் வகையில் தற்போது முதல் முதலாக சமந்தா மற்றும் தமன்னா இணைந்துள்ளனர். நடிகை சமந்தா கடந்த சில வாரங்களாக ’சாம்ஜாம்’ என்ற தொலைக்காட்சித் தொடரை நடத்திவருகிறார் என்பது தெரிந்ததே. இந்த தொடரில் சிரஞ்சீவி, விஜய்தேவரகொண்டா உள்பட பல முக்கிய பிரபலங்கள் ஒவ்வொரு வாரமும் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் சமந்தாவின் ’சாம்ஜாம்’ தொடரில் தற்போது தமன்னா கலந்து கொண்டுள்ளார். தமன்னா மற்றும் சமந்தா இந்த நிகழ்ச்சிக்காக உரையாடும் படப்பிடிப்பு இன்று நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான புகைப்படங்களை தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சமந்தா மற்றும் தமன்னா உரையாடிய இந்த ’சாம்ஜாம்’ நிகழ்ச்சி வரும் 11ம் தேதி ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால்.... சித்ரா குறித்து சக நடிகையின் உருக்கமான பதிவு!

சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகத்தையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்ட

'தளபதி 65' படத்தின் டைட்டில் இதுவா? வைரலாகும் போஸ்டர்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 'தளபதி 65' படத்தை இயக்க இருப்பது யார்

கின்னஸ் சாதனையில் 10 நொடிகளில் தூள் தூளாக்கப்பட்ட 144 மாடிக்கொண்ட கட்டிடம்…

அபுதாபியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய வணிக நிறுவனமாக இயங்கி வந்த கட்டிடம் ஒன்று வெறுமனே 10 நொடிகளில் தகர்க்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.

ஒரு கிட்னியுடன் உலகத் தரவரிசைப் பட்டியலில் உச்சத்தைத் தொட்ட இந்திய வீராங்கனை!!!  வைரல் டிவிட்!!!

17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முன்னாள் தடகள வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜ் ஒரு அதிர்ச்சி டிவிட்டை வெளியிட்டு உள்ளார்.

வாழைப்பழக் கூழுக்குள் 1,000 கிலோ கொக்கைன்… பரபரப்பான கடத்தல் பின்னணி!!!

கொரோனா காலத்திலும் உலகம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல் விவகாரங்கள் தொடர்ந்த நடைபெற்று கொண்டே இருக்கிறது