close
Choose your channels

அஜித், விஜய்யை வன்மையாக கண்டிக்கின்றேன்: பிரபல நடிகர் பேச்சு

Saturday, April 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய் ஆகிய இருவரும் படத்தின் பட்ஜெட்டில் 90% சம்பளமாகப் பெற்றுக் கொள்வதால் தமிழ்சினிமா தரம் குறைந்து வருகிறது என பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த 90களில் பிரபல ஹீரோவாக இருந்தவர் அருண்பாண்டியன் என்பதும் தற்போது அவர் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராக உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கருணாஸ் நடித்த ’ஆதார்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அருண்பாண்டியன் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியபோது, ‘தற்போது தமிழ் சினிமா ஒரு மோசமான நிலையில் உள்ளது என்றும் ஒரு படத்தின் பட்ஜெட்டில் அஜித், விஜய் போன்ற நடிகர்கள் 90% சம்பளமாகப் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் மீதி உள்ள 10 சதவீதத்தில் தான் படம் எடுக்கப்படுவதாகவும், அதனால் படத்தின் தரம் குறைந்து வருகிறது என்றும் கூறினார்.

அண்டை மாநில படங்கள் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் வசூலை குவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் சினிமாவின் வசூல் திருப்திகரமாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும்  நாங்கள் சினிமாவில் நடித்து கொண்டிருந்தபோது 10 சதவீதம் மட்டுமே சம்பளமாக பெற்றோம் என்று 90% படத்திற்கு செலவு செய்வோம் என்றும் அப்படி செலவு செய்தால்தான் படம் தரமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ‘ஆதார்’ படத்தை பொறுத்தவரைக்கும் கருணாஸ் சம்பளமே வாங்கவில்லை என்றும் தான் 50 சதவீதம் மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளதாகவும் அதனால் இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.