ரூ.2500 கோடி மோசடி வழக்கில் தமிழ் நடிகருக்கு தொடர்பா?  போலீஸார் விசாரணை..!

  • IndiaGlitz, [Saturday,April 01 2023]

2500 கோடி மோசடி வழக்கில் தமிழ் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆருத்ரா கோல்ட் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ரூபாய் 2500 கோடி வரை பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று வாக்குறுதியின் படி பணத்திற்கு போதிய வட்டி தராமல் ஏமாற்றியதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் ஹரிஷ் மட்டுமின்றி மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியதில் மேலும் சிலருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ்-க்கு ஹரிஷ் உடன் பழக்கம் இருந்தது என்றும் அவர்கள் இருவருக்கும் இடையே பண பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் அந்த பணத்தை கொண்டுதான் ஆர்கே சுரேஷ் சமீபத்தில் ஒரு திரைப்படத்தை தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.



இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால் ஆர்கே சுரேஷ் ஏற்கனவே துபாய் சென்றுள்ளதால் அவர் சென்னை திரும்பியதும் அவரிடம் விசாரணை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

More News

'இந்தியன் 2' அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கும் நாடு இதுதான்: கமல் வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

 கடந்த சில மாதங்களாக 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதில் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருக்கும் நிலையில்

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்.. வைரல் புகைப்படங்கள்..!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் கடந்த சில ஆண்டுகள் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தமிழர்களின் தொன்மையான பல பொருள்கள் இங்கு கிடைத்து வருவதாகவும்

இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது, தோல்விக்கு இதுதான் காரணம்; சிஎஸ்கே கேப்டன் தல தோனி..!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிதொடர் தொடங்கியது. முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற

பாரதிராஜா நடிப்பில் மனோஜ் இயக்கும் படம்: டைட்டில் லுக் ரிலீஸ்..!

இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிப்பில் அவரது மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.

மீண்டும் விஜய்யுடன் மோதும் பிரபல நடிகரின் படம்.. 4 ஹீரோயின்கள் அறிவிப்பு..!

விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்துடன் வெளியான பிரபல நடிகரின் அடுத்த படம் விஜய் நடித்து வரும் 'லியோ' வெளியாகும் தினத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது