close
Choose your channels

ரூ.2500 கோடி மோசடி வழக்கில் தமிழ் நடிகருக்கு தொடர்பா?  போலீஸார் விசாரணை..!

Saturday, April 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2500 கோடி மோசடி வழக்கில் தமிழ் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆருத்ரா கோல்ட் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ரூபாய் 2500 கோடி வரை பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று வாக்குறுதியின் படி பணத்திற்கு போதிய வட்டி தராமல் ஏமாற்றியதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் ஹரிஷ் மட்டுமின்றி மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியதில் மேலும் சிலருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ்-க்கு ஹரிஷ் உடன் பழக்கம் இருந்தது என்றும் அவர்கள் இருவருக்கும் இடையே பண பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் அந்த பணத்தை கொண்டுதான் ஆர்கே சுரேஷ் சமீபத்தில் ஒரு திரைப்படத்தை தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.



இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால் ஆர்கே சுரேஷ் ஏற்கனவே துபாய் சென்றுள்ளதால் அவர் சென்னை திரும்பியதும் அவரிடம் விசாரணை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.