close
Choose your channels

தமிழிசை செளந்தர்ராஜன் குறித்து அவதூறு: தமிழ் நடிகர் அதிரடி கைது

Saturday, March 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்து அதன்பின்னர் சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் புகைபடத்தை சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ் நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த சாதிக் பாஷா என்பவர், தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்து வருகிறார். இவர் பேஸ்புக் உள்பட ஒருசில சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளார் என்பதும் இவர் பதிவு செய்யும் வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் சாதிக் பாஷா தனது சமூக வலைத்தளபக்கத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் படத்துடன் தனது படத்தை இணைத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மன்னார்குடி பாஜக நகரச் செயலாளர் ரகுராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ,மன்னார்குடி நகர காவல் துறையினர் சாதிக் பாஷாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாதிக் பாஷாவை 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க மன்னார்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.