சைக்கிளில் சென்ற தமிழ் ஹீரோவிடம் இருந்து செல்போனை பறித்த மர்ம நபர்கள்!

  • IndiaGlitz, [Wednesday,December 02 2020]

பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் சைக்கிளில் சென்னையின் முக்கிய சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர் அவருடைய விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

90களின் பிரபல ஹீரோவான நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய ’கடல்’ திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் தற்போது தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை ஹீரோக்களில் ஒருவராக உள்ளார்

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கௌதம் கார்த்திக்கின் செல்போனை மர்ம நபர்கள் இருவர் பறித்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை அவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது திடீரென வழிமறித்த இருவர், அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு சென்றதாகவும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கௌதம் கார்த்திக்கின் செல்போனை பறித்து சென்ற 2 பேருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.
 

More News

பாலாஜியை கதறி அழவைத்த பிக்பாஸ்: லீக் ஆன வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர் மட்டுமன்றி கரடுமுரடான போட்டியாளர் என்ற விமர்சனம் பாலாஜிக்கு உண்டு. எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் முகத்துக்கு நேரே பேசிவிடுவார்

கால்சென்டர் டாஸ்க்கில் பெஸ்ட் யார்? முதலிடத்தை பிடிக்க போட்டா போட்டி!

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக கால்சென்டர் நடைபெற்று வந்தது என்பதும் இதில் காலர்கல், கால் சென்டர் ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டார்கள் என்பதும் தெரிந்ததே

பா.ரஞ்சித்-ஆர்யா படம்: ஃபர்ஸ்ட்லுகே அசத்தல்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் குத்துச்சண்டை குறித்த கதையம்சம் கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில்

புரெவி புயல்… பாம்பனில் ஏற்றப்பட்ட 7 ஆம் எண் கூண்டு எச்சரிக்கை…தென்மாவட்டங்களின் நிலை???

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பன் பகுதிக்கு சுமார் 530 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

மீண்டும் உடைகிறது தயாரிப்பாளர் சங்கம்: புதிய சங்கத்தின் பெயர் அறிவிப்பு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பிரிவு ஏற்கனவே நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என பிரிந்தது என்பதும் இதில் பாரதிராஜா தலைவராக இருக்கிறார் என்பதும் தெரிந்ததே