போலீசுக்கு பயந்து ஊர் ஊராக சுற்றி கொண்டிருக்கின்றேன்: தமிழ்ப்பட ஹீரோ

  • IndiaGlitz, [Sunday,November 03 2019]

'நம்ம கத’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் கவித்ரன், தான் போலீசுக்கு பயந்து ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருப்பதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சென்னை பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டே திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகர் கவித்ரன். இவரது நடிப்பில் ‘நம்ம கத’ என்ற படம் உருவாகி வருகிறது. இவரது தந்தை எஸ்.எஸ். கண்ணன் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில் கவித்ரன் மற்றும் அவரது தந்தை எஸ்.எஸ். கண்ணன் ஆகிய இருவர் மீதும் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் நடிக்க சான்ஸ் தருவதாக தன்னிடம் பணம் பெற்று தன்னை ஏமாற்றிவிட்டதாக மாணவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.எஸ். கண்ணன், நடிகர் கவித்ரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எஸ்.எஸ். கண்ணன், கவித்ரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தனர். இந்த நிலையில் மேலும் இரு வழக்குகள் எஸ்.எஸ்.கண்ணன் மீது பதிவு செய்யப்பட்டதால் இந்த வழக்குகளில் கைதாகாமல் இருக்க கண்ணன், நடிகர் கவித்ரன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் கவித்ரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘தனது தந்தை ஒரு தியாகி என்றும், சென்னையில் குறிப்பிட்ட ஒரு பகுதியின் முன்னேற்றத்திற்கு தனது தந்தை தான் காரணம் என்றும் ஆனால் தற்போது போலீசுக்கு பயந்து ஓடிக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த இரு வழக்குகளிலும் தாங்கள் சிக்கினால், போலீசார் தங்களைப் பிடித்து கை, கால்களை முறித்து மாவுக் கட்டு போட்டுவிடுவார்களே என்ற அச்சத்தில் இருவரும் ஓடி ஒளிந்து கொண்டிருப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறியபோது, ‘குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் போலீஸ் மீது குற்றஞ்சாட்டி முகநூலில் வீடியோ வெளியிடுவது தற்போது ஃபேஷனாகி வருகின்றது என்றும், தந்தை கண்ணன் மற்றும் நடிகர் கவித்ரன் ஆகியோர்களை பிடித்து விசாரித்து புகார் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

More News

கணவனை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த மனைவி: மகள்-மகனும் உடந்தை

சாத்தூர் அருகே கணவரை அவரது மனைவியே கொலை செய்து மகள் மற்றும் தாய் உதவியுடன் வீட்டின் தோட்டத்தை புதைத்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சூப்பர் ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் லாரன்ஸ்!

ராம்சரண்தேஜா, சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் தெலுங்கு படம் ரங்கஸ்தலம். இந்த படம் சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தெலுங்கு மொழியிலேயே ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது 

'பிகில்' கேப்டனுக்கு நயன்தாரா கொடுத்த பிறந்த நாள் பரிசு!

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வசூல் மழையை பொழிந்து கொண்டிருக்கின்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விஜய்யின் இரண்டு கேரக்டர்களில்

தனுஷின் அடுத்த பட ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி

அமேசான் எடுத்த அதிரடி முடிவு: சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி

அமேசான் நிறுவனம் அனைத்து பொருட்களையும் வீட்டுக்கே வந்து கொடுக்கும் சேவையை செய்து வருகிறது என்பது தெரிந்ததே. உட்கார்ந்த இடத்திலிருந்தே மக்கள் அனைத்து பொருட்களையும் அமேசான்