close
Choose your channels

காவி உடையணிந்து இதையெல்லாம் செய்யலாம், நடிக்க மட்டும் கூடாதா? தீபிகாவுக்கு ஆதரவளித்த தமிழ் நடிகர்

Thursday, December 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை தீபிகா படுகோனே ’பதான்’ என்ற திரைப்படத்தில் காவி உடை அணிந்து ஆபாசமாக நடித்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் காவி உடை அணிந்து இதையெல்லாம் செய்யலாம் ஆனால் நடிக்க மட்டும் கூடாதா? என தமிழ் நடிகர் ஒருவர் தீபிகா படுகோனுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பாகி உள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த ’பதான்’ திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் சில காட்சிகளில் காவி உடை அணிந்து கிளாமராக தீபிகா படுகோனே நடித்திருந்த நிலையில் அந்த காட்சிகள் சர்ச்சைக்குள்ளாகியது.

குறிப்பாக மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு இந்த பாடலில் உள்ள காட்சிகளை மாற்றாவிட்டால் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் ’காவி உடை அணிந்தவர்கள் சிறுமிகளை கற்பழிக்கிறார்கள், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள், வெறுப்பு பேச்சு பேசுகிறார்கள். ஆனால் காவி உடை அணிந்து திரைப்படத்தில் மட்டும் நடிக்க கூடாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அவரது இந்த கேள்விக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.