close
Choose your channels

தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

Tuesday, March 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இயக்குனர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இயக்குனர் ஜிஎம் குமார் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’கேப்டன் மகள்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு ’தொட்டி ஜெயா’ ’வெயில்’ ’மலைக்கோட்டை’ ’குருவி’ உள்பட பல படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கத்தில் உருவான ’அவன் இவன்’ என்ற படம் தான் இவருக்கு பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ’அறுவடை நாள்’ ’பிக்பாக்கெட்’ ’இரும்பு பூக்கள்’ ’உருவம்’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன் ஜிஎம் குமார் தனது சமூக வலைதளத்தில் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் ’ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை’ என்றும் அந்த புகைப்படத்திற்கு அவர் கேப்ஷனாகபதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு காமெடியான கமெண்ட்ஸ்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.