நாளை வெளியாகும் படத்தின் ஹீரோ குடும்பத்தில் 11 பேர்களுக்கு கொரோனா தொற்று!

  • IndiaGlitz, [Wednesday,January 12 2022]

நாளை ரிலீஸாக இருக்கும் படத்தில் ஹீரோவின் குடும்பத்தில் உள்ள 11 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது திரை உலகினருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் தினத்தையொட்டி நாளை 8 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன என்பதும் அதில் ஒன்று விதார்த் நடித்த ’கார்பன்’ என்ற திரைப்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’கார்பன்’ திரைப்படத்தின் ஹீரோ விதார்த்தின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர்களுக்கு ஒரே சமயத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து சிலர் மருத்துவமனையிலும் சிலர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விதார்த் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது கோலிவுட் அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்றும் அவர்கள் அனைவரும் குணமடைய திரை உலகினர் வாழ்த்துக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விதார்த் ’கார்பன்’ திரைப்படத்தை அடுத்து ’ஆயிரம் பொற்காசுகள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நீருக்கு அடியில் சொர்க்கம்… மீன்களோடு நீச்சலடிக்கும் இளம் நடிகை!

தமிழ், கன்னட சினிமாவில் அறியப்படும் நடிகையாக வலம்வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள

ஒட்டகங்களுக்கு ஸ்டார் ஹோட்டலா? மில்லியன் கணக்கில் குவியும் வருமானம்!

சவுதி அரேபியா நாட்டில் ஒட்டகங்களுக்கு ஸ்டார் ஹோட்டல் கட்டிய நபர்

இந்தியக் கிரிகெட் அணியில் சச்சின்? பிசிசிஐ கொடுக்கப்போகும் பதவி என்ன தெரியுமா?

16 வயதில் இந்தியக் கிரிக்கெட் அணிக்குள் நுழைந்து கிரிக்கெட்டில் உலகில் புது சாம்ராஜ்யத்தையே படைத்தவர் சச்சின் டெண்டல்கர்.

தனுஷின் 'மாறன்' ஓப்பனிங் பாடல் குறித்த மாஸ் அப்டேட்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாறன்' என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

மீண்டும் இணைகிறது 'ஒருகல் ஒருகண்ணாடி' கூட்டணி!

இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கிய 'ஒருகல் ஒருகண்ணாடி' என்ற படத்தில் இணைந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.