கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்: திமுக பிரமுகர்கள் மீது தமிழ் நடிகை பகீர் குற்றச்சாட்டு!

  • IndiaGlitz, [Monday,June 14 2021]

ஒரு பக்கம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களின் மத்தியில் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில் ஒரு சிலர் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொதுமக்களை மிரட்டி வருவது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த வகையில் நடிகை ஆதிரா பாண்டி லட்சுமி என்பவர் தன்னையும் தனது மகனையும் திமுக பிரமுகர்கள் மிரட்டுவதாகவும், கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

சந்தேகதிர்க்கிடமான சிலர் எதிர் வீட்டில் சுவர் ஏறுவதை தட்டிக்கேட்ட என்னையும், மகனையும் அப்பகுதி திமுக இளைஞர் அணியினருடன் சேர்ந்து சுற்றிவளைத்து தாக்கி, வீட்டில் நுழைந்து என் மகனை அடித்து கொலை மிரட்டல் விட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அரசு கொடுக்குமா? என்று பதிவு செய்துள்ளார்.

அதேபோல் இன்னொரு டுவிட்டில் நம்மாழ்வார் அக்குப்பஞ்சர் சிகிச்சை மையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை இங்கு வந்தால் கொன்று விடுவேன்! என்று மிரட்டி அங்கிருந்த பைக்குகளை அவர் மீது தள்ளும் மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் திமுக இளைஞர் அணி நபர்கள். அரசின் நடவடிக்கை தேவை என்று பதிவு செய்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் நடிகை ஆதிரா பாண்டிலட்சுமி தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் ஆதிரா பாண்டிலட்சுமி. ’ஒரு குப்பை கதை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அடக்கடவுளே… நான் திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன்… மரணத்தில் இருந்து தப்பிய அதிசய மனிதன்!

அமெரிக்காவில் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவரை திமிங்கலம் ஒன்று விழுங்க முயற்சித்து இருக்கிறது.

என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார் நானும் வருந்திருக்கிறேன்: ராகவா லாரன்ஸ் டுவிட்!

என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் என்றும் நானும் வருந்தி இருக்கிறேன் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டுவிட் ஒன்றை நடிகர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பதிவு செய்துள்ளார்.

தடுப்பூசி போடும்போதும் ஸ்டைலான போஸ் கொடுத்த யோகிபாபு: வைரல் புகைப்படம்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அனைவரும் தப்பிக்க வேண்டுமென்றால் அனைவரும் கண்டிப்பாக

பார்க்கிங்கில் நின்ற புது கார், சில நிமிஷத்தில் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி வீடியோ!

மும்பையின் குடியிருப்பு பகுதியில் நின்று இருந்த கார் ஒன்று நேற்று காலை திடீரென தோன்றிய பள்ளத்தில் புதைந்து மாயமானது.

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் கடைசி நிமிடங்கள்… காவு வாங்கிய ஒரு மருந்து?

பாப் இசை உலகின் அரசன், மூன் வாக்கர் என அழைக்கப்பட்ட மைக்கல் ஜாக்சன், உலகம் முழுவதும் பல கோடி கணக்கான ரசிகர்களால் விரும்பப்பட்டார்.