பகல் இரவானது.. பொருட்கள் தூக்கி வீசப்பட்டன.. துபாய் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் நடிகையின் பதிவு..!

  • IndiaGlitz, [Saturday,April 20 2024]

சமீபத்தில் துபாயில் வரலாறு காணாத கனமழை பெய்ததை அடுத்து நாடு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது என்பதும் பல குடியிருப்புகளில் தண்ணீர் புகுத்ததால் ஏராளமான மக்கள் அவஸ்தைப்பட்டனர் என்ற செய்தியையும் பார்த்தோம்.

இந்த நிலையில் துபாயில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கிய அனுபவம் குறித்து தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

தமிழில் வெளியான ’555’ ’விழித்திரு’ ’விரட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை எரிகா பெர்னாண்டஸ். இவர் பாலிவுட்டில் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். தற்போது இவர் துபாயில் செட்டில் ஆகியுள்ள நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழை குறித்து பதிவு செய்துள்ளார்

16ஆம் தேதி நள்ளிரவு திடீரென குளிர்ந்த காற்று வீசியது, மழையும் பெய்ததால் அதை ரசிக்க தொடங்கினேன், ஆனால் சில நிமிடங்களில் பகல் இரவானது, மேகங்கள் மொத்த நகரத்தையும் மூடிவிட்டது, பலத்த காற்று வீசியதால் வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டன, பக்கத்து வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் பறந்து வந்தது, எனவே நான் மிகவும் பயந்துவிட்டேன்

எங்கள் வீட்டிற்குள் வந்த மழை தண்ணீரை வெளியேற்ற ரொம்ப கஷ்டப்பட்டோம், எனது பாதுகாப்பு குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி, அதிர்ஷ்டவசமாக நாங்கள் எந்த ஆபத்திலும் சேர்க்காமல் பாதுகாப்பாக உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

சினிமாவுக்கு போகிறார் 'சிறகடிக்க ஆசை' நடிகர்.. திவ்யா துரைசாமி தான் ஜோடியா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் மனோஜ் என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீதேவாவுக்கு

தனுஷ், பிரபுதேவா இணையும் இன்னொரு 'ரவுடி பேபி.. கலக்க காத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்..!

தனுஷ் நடித்த 'மாரி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் பிரபுதேவா நடன இயக்கத்தில் உருவான இந்த பாடலில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி அசத்தலாக

தளபதி விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார். அதிர்ச்சி காரணம்..!

தளபதி விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகி உள்ளது.

'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' ஆக்கிடாதீங்க.. பிரபல விமர்சகருக்கு விஜய் ஆண்டனி பதிலடி..!

விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போதும் இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது

அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்பே படப்பிடிப்பு தொடக்கம்.. சிம்பு படத்தின் மாஸ் தகவல்..!

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'எஸ்டிஆர் 48' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு