close
Choose your channels

திருப்பதி கோவிலில் மகனுக்கு ஆசி பெற்ற தமிழ் நடிகை.. புகைப்படம் வைரல்!

Tuesday, January 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை தனது மகனுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆசி பெற்ற புகைப்படம், வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் காஜல் அகர்வால் அஜித் நடித்த ’விவேகம்’, விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’, ‘மெர்சல்’ உள்பட பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தற்போது திருமணத்திற்கு பின்னரும் அவர் பிஸியான நடிகையாக இருக்கிறார் என்பதும் ’இந்தியன் 2’ ’கருங்காப்பியம்’ உள்பட சில படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை தொழில் அதிபர் கௌதம் என்பவரை திருமணம் நடந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்துள்ள நிலையில் அவர் தனது மகனின் புகைப்படத்தை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவார்.

இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது மகனுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் காஜல் அகர்வாலுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கி அவருக்கும் அவரது மகனுக்கும் ஆசீர்வாதம் செய்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.